பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 77-வது குடியரசு தின விழா: பள்ளியின் புதிய இலச்சினை (Logo) அறிமுகம்!
📚👉*பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 77-வது குடியரசு தின விழா: பள்ளியின் புதிய இலச்சினை (Logo) அறிமுகம்!*
திருவாரூர் ஜன-26 2026:
🟣👉திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
தேசபக்தி உணர்வுடன் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக புதிய இலச்சினை (Logo) வெளியிடப்பட்டது விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
🟩👉 *இலச்சினை வெளியீடு*
பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. நா.அன்பானந்தம் அவர்கள் பள்ளியின் புதிய இலச்சினையை முறைப்படி வெளியிட்டார். இதனைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
📚👉 *இலச்சினையின் சிறப்பம்சங்கள்*
🟩👉வெளியிடப்பட்ட இலச்சினை, கல்வியின் அவசியத்தையும் ஊரின் சிறப்பையும் பறைசாற்றும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது:
⚪👉 *அரசு அங்கீகாரம்* : இலச்சினையின் மையத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது, இது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இப்பள்ளி சிறப்பாக இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.
⚪👉 *அறிவுத் தீபம்* : பேனாவின் முனையிலிருந்து சொட்டும் மையானது, அகல் விளக்கின் நெய்யாக மாறி, அதன் மூலம் கல்வி எனும் தீப ஒளி அனைவருக்கும் பரவுவதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
⚪👉 *பாலின சமத்துவம்:* ஆண் மற்றும் பெண் என இருபாலினக் குழந்தைகளும் இணைந்து இருப்பது போன்ற உருவம், சமத்துவக் கல்வியை வலியுறுத்துகிறது.
⚪👉 *ஆயுதமாகும் கல்வி*: மாணவர்களின் மிகப்பெரிய வலிமை 'புத்தகம்' என்பதை உணர்த்தும் வகையில் புத்தகத்தின் படம் இடம்பெற்றுள்ளது.
⚪👉 *வேளாண் பெருமை:* பழையவலம் கிராமத்தின் அடையாளமான வேளாண்மையை சிறப்பிக்கும் விதமாக நெற்கதிர்களும், ஏர்க்கலப்பையும் இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளன.
*தாரக மந்திரம்*: இவை அனைத்திற்கும் மகுடம் சூட்டினாற்போல, *"கல்வியே அழியாச் செல்வம்"* என்ற வலிமையான வாசகம் இலச்சினையின் கீழ் அமையப்பெற்றுள்ளது.
*பங்கேற்பாளர்கள்*
இந்த விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், கல்விப் புரவலர்கள், கிராமப் பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
பள்ளியின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக அமைந்த இந்த புதிய இலச்சினை வெளியீடு, மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Comments
Post a Comment