Posts

Showing posts from June, 2025

திருவாரூர் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு:

Image
 உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு: பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயனடைந்தனர் பழையவலம், ஜூன் 26, 2025: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வைப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். கருத்தரங்கில், போதைப்பொருட்களின் வரலாறு, அதன் வகைகள், உடல்நலம் மற்றும் மனநலத்தின் மீதான அதன் மோசமான விளைவுகள், சமூகத்தில் போதைப்பொருள் ஏற்படுத்தும் சீரழிவுகள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து உதவி ஆய்வாளர் அவர்கள் விளக்கமளித்தார். மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும், சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடுகளை தவிர்ப்பது பற்றியும், போதைப்பொருட...

பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Image
பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் பரிசுத்தொகை, ஊக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும்  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம் பெற்ற இ.அகல்யா (456/500) என்ற மாணவிக்கு ரூ-5000 /- , இரண்டாம் இடம் பெற்ற அ.அனுஸ்ரீ என்ற மாணவிக்கு  ரூபாய் 2500/- மூன்றாம் இடம் பெற்ற 442 / 500 வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா ஆகியோருக்கு   ரூபாய் 1000/- ஊக்கத் தொகையும்,   கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி கல்வி சிறகுகள்  அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்கள். இறுதியாக பள்ளி 100% தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் விதமாக பள்ளிக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.