திருவாரூர் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு காமராஜர் விருது வழங்கி கவுரவிப்பு!
🟩👉திருவாரூர் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு காமராஜர் விருது வழங்கி கவுரவிப்பு! நாள் 21.7.2025 திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மு. சிவகரிஷ் தமிழ்நாடு அரசின் 'காமராஜர் விருது' பெற்றார். மாணவர்களின் திறமையை உறுதி செய்யும் வகையில் கல்வித்துறையின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இந்த விருதை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவனிடம் வழங்கி பாராட்டினார். இவ்விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர்கள் மற்றும் பல கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியின் தலைமையாசிரியர் மீனா.சாமிநாதன் கலந்து கொண்டு மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 2023–2024ம் கல்வியாண்டிற்கான மாணவர் தேர்வுத் திறன்கள் மற்றும் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் மு.சிவகரிஷ் என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியம். மாணவரின் இந்த சாதனை, அவரது கல்விச் சிறப்பையும், ஆசிரியர்களின் வழிகாட்டலையும் உணர்த்துகிறது. இவ்விழா மாணவ...