பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கோலாகலம்: போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டு!
திருவாரூர், ஜூலை 15 🔴👉திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு "கல்வி வளர்ச்சி நாள்" விழா இன்று (15.07.2026) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்குப் பள்ளிப் பொறுப்புத் தலைமையாசிரியர் திரு.*மீனா. சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி மு. மஞ்சுளா வரவேற்றுப் பேசினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி.பா. சரஸ்வதி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் துணைத் தலைவர் திருமதி ச. சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். தமிழக அரசின் "உங்கள் ஊரில் உங்களை தேடி" எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ், பள்ளியைப் பார்வையிட வந்திருந்த திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் . பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மனமார்ந்த மரியாதை செலுத்தி விழாவினைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பெருந்தலைவரின் படத்திற்கு மலர் தூவி மரி...