பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் - 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்பு
தலைப்பு: பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது! இடம்: பழையவளம், திருவாரூர் மாவட்டம் நாள்: ஆகஸ்ட் 29, 2026 திருவாரூர் மாவட்டம், பழையவலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மறு கட்டமைப்பு (2026-2028) விழிப்புணர்வு கூட்டமானது பெரும் வரவேற்புக்கு மத்தியில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் மீனா சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கி, கூட்டத்தை ஒருங்கிணைத்துத் துவக்கி வைத்தார். தமிழ் ஆசிரியர் மு. மஞ்சுளா அவர்கள் வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில், பட்டதாரி ஆசிரியர்களான மு. நாகநாதன் மற்றும் சௌ. கௌரிமீரா ஆகியோர் கடந்த ஆண்டுகளில் பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், புரவலர்களைத் தேடிப் பள்ளிக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தந்தது குறித்தும் விளக்கிப் பேசினர். மேலும், பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பள்ளியில் ஏற்பட்ட பல்வேறு மேம்பட்ட வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட...