பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2024-25 ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் பரிசுத்தொகை, ஊக்க பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதலிடம் பெற்ற இ.அகல்யா (456/500) என்ற மாணவிக்கு ரூ-5000 /- , இரண்டாம் இடம் பெற்ற அ.அனுஸ்ரீ என்ற மாணவிக்கு ரூபாய் 2500/- மூன்றாம் இடம் பெற்ற 442 / 500 வி.மாதேஸ்வரி, த.செமிலா, ஜோ.ஜெபஸ் ராஜா ஆகியோருக்கு ரூபாய் 1000/- ஊக்கத் தொகையும், கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி கல்வி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் சிறப்பித்தார்கள்.
இறுதியாக பள்ளி 100% தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் விதமாக பள்ளிக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.






Comments
Post a Comment